உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை

71 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்வது தொடர்பில் அரச அச்சகத் திணைக்கள தலைவர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் நாளை மறுதினம் பேச்சுவார்த்தையில் ஈடுபட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

நிதி விடுவிப்பு தொடர்பில் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவுடன் விசேட பேச்சுவார்த்தையை மேற்கொண்டு எதிர்வரும் வியாழக்கிழமை உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை விடுக்க ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

இதேவேளை சர்வஜன வாக்குரிமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 9ஆம், 10ஆம் திகதிகளில் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி விடுவிப்பு பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் முன்வைக்க எதிர்க்கட்சிகள் அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.