மட்டக்களப்பு மாவட்டத்தின் துறைநீலாவணையில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் துறைநீலாவணை 8 ஆம் வட்டாரத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய கருணாநிதி ரஜீந்தன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
பாண் விற்பனையில் ஈடுபடும் முச்சக்கரவண்டியொன்று மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்றவரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை, கல்முனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்