கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம் !

154 0

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.

திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபரி தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (3) அதிகாலை 5 மணி முதல் அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை பக்தர்களை கொண்டு செல்லும் சேவையில் ஈடுபட்டுள்ளன.

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவானில் இருந்து காலை 6 மணி இடம்பெறுகிறது.

படகு சேவையில், குறிக்கட்டுவானில் இருந்து பயணிக்கும், நபர் ஒருவருக்கு, இரு வழிப் பயணக் கட்டணமாக 2000 ரூபா அறிவிடப்படுகின்றது.

இன்று பிற்பகல் 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை ஆரம்பிக்கவேண்டும் என பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாளைய தினம் சனிக்கிழமை கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கான காலை உணவை, இலங்கை கடற்படையினரால் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, கச்சத்தீவு புனித அந்தோனியார்  ஆலய திருவிழாவுக்காக இந்தியாவிலிருந்து இரண்டாயிரத்து 408 பக்தர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் இதற்காக ராமேஸ்வரத்திலிருந்து 60 விசைப்படகுகளும் 12 நாட்டுப் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தி செய்திகள் தெரிவிக்கின்றன.