கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/2023 இம்முறை மேற்கொள்ளப்பட்ட பெரும்போகச் செய்கையில் வரட்சி, வெள்ளம், நோய் தாக்கம் காரணமாக 2725.74 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ப.தேவரதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும் போக செய்கையில் வெள்ளம் வரட்சி நோய்த்தாக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கேட்ட போதே 2725 .74 ஏக்கர் நெற்செய்கை அழிந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ப.தேவரதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணை மடுக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் சிறிய நடுத்தர குளங்கள் மானாவாரி செய்கை நிலங்கள் உள்ளடங்களாக 66,339.13 ஏக்கர் நிலப்பரப்பில 2022/2023 பெரும் போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவடைந்து வருகின்றன.
மேற்படி செய்கைகளில் வெள்ளம் வறட்சி நோய் தாக்கம் மற்றும் காட்டு யானை உள்ளிட்ட மிருகங்கள் என்பவற்றால்; மேற்படி அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களத்தினால் அறிக்கையிடப்பட்டுள்ளது.
மாவட்டத்திலுள்ள உள்ள 10 கம நலசேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2176.34 ஏக்கர் நெற்செய்கை மாவட்டத்தில் நிலவிய வளர்ச்சி காரணமாக அழிவடைந்துள்ளன.
அதனைத் தொடர்ந்து அனமையில்; பெய்த மழை வெள்ளம் காரணமாக 342.40 ஏக்கர் செய்கைகள் அழிவடைந்துள்ளன.
இதனை விட நோய்த்தாக்கம் காரணமாக பூநகரி பிரதேசத்தில் 141.75 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளன அழிவடைந்துள்ளதாகவும் ஏனைய காட்டு யானை மற்றும் விலங்குகளின் தாக்கத்தினால் 65.25ஏக்கர் செய்கையும் அழிந்துள்ளது.
இவ்வாறு இம்முறை மேற்கொள்ளப்பட்ட 2022 /2023 பெரும் போக செய்கையின் போது வறட்சி வெள்ளம் நோய் தாக்கம் விலங்குகள் என்பவற்றால் சுமார் 2725.74 ஏக்கர் வரையான நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன் இதனால் 1106 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி திணைக்களத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

