மருதமுனையில் உள்ள கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்துக்கு, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், நேற்று (27) விஜயம் மேற்கொண்டார்.
இதன்போது கைத்தறி ஆடை உற்பத்தி மூலமான உற்பத்திகளை பார்வையிட்டதுடன், இதற்கான சிறந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தையை ஏற்படுத்தித் தருவதாகவும் உற்பத்தியாளர்களிடம் உறுதியளித்தார்.
கைத்தறி உற்பத்தி மூலம் மருதமுனை பிரதேசம் பல இலாபங்களை அடைந்து வருகின்றது. இதனை மேம்படுத்துவதற்கான உத்திகளை தங்களுக்கு வழங்குமாறும் கைத்தறி உற்பத்தியாளர்கள் ஆளுநரிடம் கேட்டுக்கொண்டனர்.

