மதுரவாயல் பறக்கும் சாலை பணி ஏப்ரல் மாதம் தொடங்கும்

145 0

சென்னை காமராஜர் துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை இருப்பதால் சரக்குகளை கையாளுவதில் சிக்கல் நீடித்தது. இதனையடுத்து சரக்கு கப்பல்களை புதுச்சேரி எடுத்து சென்று அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் சரக்குகள் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது.

இதற்காக புதுச்சேரி துறைமுகம் ரூ.40 கோடியில் சீரமைக்கப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்ததையடுத்து சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு 67 மீட்டர் நீளமுள்ள ‘எம்.வி. ஹோப் செவன்’ எனப்படும் தனியார் சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது. இதனை துறைமுக சபை தலைவர் சுனீல்பாலிவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை-புதுச்சேரி இடையேயான சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கி இருப்பதன் மூலம் சென்னை-திருச்சி இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதும் குறையும். சாலை வழியாக சரக்குகளை எடுத்து வரும்போது கூடுதல் செலவு ஏற்படும். கடல்வழி போக்குவரத்து மூலம் சரக்குகளை கொண்டு செல்லும்போது 25 முதல் 30 சதவீதம் செலவு குறையும். முக்கியமாக சுங்கத்துறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் புதுச்சேரி துறைமுகத்திலேயே மேற்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டு உள்ளது.