தேர்தல்களை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை

147 0

தேர்தலை நடத்துவதற்கான சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை என பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி  தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலை ஒத்திவைக்ககோரும் மனுவை உயர்நீதிமன்றம் மே 11 ம் திகதி வரை பிற்போட்டுள்ளதே தவிர தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியான தடை எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் யதார்த்தத்தில் அரசாங்கம் நிதியை சுற்றுநிரூபங்கள் மூலம் தடைசெய்கின்றது என தெரிவித்துள்ள ரோகண ஹெட்டியாராச்சி எங்கள் நாடாளுமன்ற தலைவர்களால் மக்களின் வாக்குரிமை கேள்விக்குட்படுத்தப்படுவது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தொடர்பான விடயங்களிற்காக ஏற்கனவே 500 மில்லியனிற்கு மேல் செலவிட்டுள்ளனர் இது பொதுமக்களின் பணம் என குறிப்பிட்டுள்ள பவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் தேர்தல் நடைபெறாவிட்டால் இந்த பணத்தை வீணடித்தமைக்கான பொறுப்பை அரசியல் தலைமையும் அரசாங்க அதிகாரிகளும் ஏற்பார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.