ஈருருளிப்பயண அறவழிப்போராட்டத்தில் வேற்றின இளையோர்கள்.

168 0

இன்று காலை நாமன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, லக்ஸ்சம்பேர்க் நோக்கி ஈருருளிப்பயணம் பயணித்து காவாய் என்ற கிராமத்தில் மாலை நிறைவு பெற்றது.இப்போராட்டத்தில் வேற்றின இளையோர் ஒருவரும் இணைந்து பயணிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் லக்சம்பேர்க், ஜேர்மனூடாக பிரான்ஸ் சென்று ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக சுவிஸ் நாட்டிற்குள் சென்று .06.03.2023 அன்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையை சென்றடையவுள்ளது.ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் அறவழிப்போராட்டக்கார்ர்களை ஒவ்வொரு நாட்டு மக்களும் வரவேற்று, உணர்வெழுச்சியுடன் தங்களது ஆதரவினை வழங்குவதோடு, இப்போராட்டங்களில் இணைந்து கொள்ளுவதும் காலத்தின் கடமையென்பதை உணர்ந்து பயணிப்போம்.