12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை

188 0

களனியை சூழவுள்ள பல பிரதேசங்களுக்கு இன்று (21) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அவசர திருத்தப் பணிகள் இடம்பெற்றமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி வத்தளை, ஹெந்தலை, அல்விஸ் டவுன், வெலிகடமுல்ல, கெரவலபிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலகஹடுவ, மருதானை வீதி, ஹுனுப்பிட்டிய, வெடிகந்த, வெவெல்துவ, பிரஞ்சுவத்தை, கிரிபத்கொட புதிய வீதி, பதிலியதுடுவ, அக்பர் தோரியாவௌ, தலுபிட்டி வீதி வரையான பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது