கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர்கள்…(காணொளி)

218 0

கேப்பாபிலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டம் 1 மணித்தியாலயங்களுக்கு மேலாக நீடித்தது.

கவனயீர்ப்பு போராட்டத்தின்போது, கடந்த 20 நாட்களுக்கு மேலாக தமது காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் காணிகளை கையளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காணிகளை மீள் வழங்க கோரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி பல்கலைக்கழக சட்ட மாணவர்களால் துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.