தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை…….(காணொளி)

242 0

 

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று மேற்கொண்டனர்.

தாதியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட மேலதிக நேர கொடுப்பனவை வழங்க வேண்டும், தாதிய பட்டதாரிகளுக்கு சுகாதார அமைச்சு நிர்வாக பதவிகள் வழங்கப்பட வேண்டும், பதவி உயர்வுக்குரிய பத்து வருட காலத்தினை ஆறு வருடங்களாக குறைக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மதியம் 12 மணி தொடக்கம் ஒரு மணி வரைக்கும் கவனயீர்ப்பு நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடளாவிய ரீதியில் தாதியர்களால் பணிப்பகிஸ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டது.