வளர்ப்பு நாயை பன்றி என நினைத்து சுட்டுக்கொன்ற நபர்!

85 0

அரம்பேபொல கமன்வத்தையிலுள்ள  ஜனசெத பெரமுனவின் தலைவர் நிலந்த குமார ரணசிங்கவின் வளர்ப்பு நாயை அயலவர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொத்துஹெர பொலிஸார் தெரிவித்தனர்.

ரணசிங்க செய்த முறைப்பாட்டின் பிரகாரம், அயலவரை விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் தனது தோட்டத்துக்குள்  காட்டுப் பன்றி வந்துள்ளது  என நினைத்ததாகவும்  நாய் என தெரிந்திருந்தால் அதனை  சுட்டிருக்க மாட்டேன் எனவும் அயலவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நாயைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும்  துப்பாக்கி வன விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக  அவருக்கு  வழங்கப்பட்ட துப்பாக்கி என்றும் அதற்கான உரிமம் அவரிடம் இருந்ததாகவும் விசாரணைகளில் தெரிய வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.