கைவிடப்பட்ட நிலையில் வௌ்ளை வேன்

237 0

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வேன் ஹொரன – மொரகஹஹேன பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வௌ்ளை நிற வேனே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், இந்த வேன் சந்தேகநபர்கள் பயன்படுத்தியதா இல்லையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளார்.

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பாதாள உலகக் குழு உறுப்பினரான சமயங் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளதோடு, அவர்கள் வௌ்ளை வேன் ஒன்றிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.