ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

75 0

ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தமது தொழற்சங்க நடவடிக்கையை நிறைவு செய்வதாக அறிவித்துள்ளது.

உரிய அதிகாரிகளுடம் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் இயந்திர சாரதிகளின் சங்கம் முன்னெடுத்திருந்த திடீர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இன்று காலை சில ரயில் பயணங்கள் ரத்தாகியிருந்த நிலையில் பயணிகள் மிகவும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்மை குறிப்பிடத்தக்கது.