சத்திர சிகிச்சைகள் சில தாமதப்படும்

144 0

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான உபகரணங்களின் தட்டுப்பாடு என்பவற்றை கருத்திற்கொண்டு அவசரமற்ற சத்திர சிகிச்சைகளை தாமதப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மற்றும் அவசர சத்திர சிகிச்சைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வைத்திய பரிந்துரைகளுக்கு அமைய  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

நாட்டின் அரச வைத்தியசாலைகளில் சுமார் 140 மருந்து வகைகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாகவும் இவற்றில் 40 வகையான மருந்துகள் இந்த வாரத்துக்குள் கிடைக்கவுள்ளதாக அமைச்சர் கூறினார்.