யாழில் அப்துல் கலாம் உருவச்சிலைக்கு இந்திய அமைச்சர் குழுவால் மரியாதை செலுத்தப்பட்டது

84 0

யாழ். பொதுசன நூலகத்தின் இந்தியன் கோர்னரில் உள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் உருவச்சிலைக்கு இந்திய அமைச்சர் குழுவால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய அரசினால் நேற்று (11.02.2023) மாலை 250 வறிய குடும்பங்களுக்கு உலருணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன், இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.