ஹட்டனில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

98 0

விற்பனைக்கு தயாராக இருந்த 6 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சந்தேக நபர்கள் இருவர் நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹட்டன் – கொழும்பு வீதியில் வசிக்கும் சந்தேக நபர், வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றபோது அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டதையடுத்து, கைதான இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரதான சந்தேக நபரின் வீட்டிலேயே வலம்புரி சங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.