திருகோணமலை – கப்பல்துறை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் யானையொன்று சிக்குண்டு இறந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதற்கு முன்னர் கொம்பன் யானையொன்றும் உயிரிழந்துள்ளதாக இன்று (09.02.2023) வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் யானைக்காக மின்சாரத்தை பயன்படுத்திய போது யானை மின்சார கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீனக் குடா பொலிஸ் நிலையத்திற்கும் இந்த சம்பவம் பற்றி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

