இலங்கையில் 5 சித்திரவதை கூடங்கள்: உயர்கல்வி அமைச்சர்

314 0

பகிடிவதை வழங்கும் மேலும் 5 சித்திரவதை கூடங்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாக உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

உலகில் வேறு எங்கும் இப்படியான சித்திரவதை கூடங்கள் இல்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அபிவிருத்திப் பணிகளை சீர்குலைக்க சகல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள். யார் இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் உருவாக்க யார் முயற்சிக்கின்றனர்?.

பகிடிவதை சித்தரவதை கூடங்களை வைத்திருப்போரே வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.

இந்த விடயம் தெரியவந்தமையானது எமது அதிஷ்டம். பல்கலைக்கழக நிர்வாகிகள் பலம் காரணமாக இந்த சித்திரவதை கூடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படியான 5 சித்திரவதை கூடங்கள் கண்டியில் இருக்கின்றன.

இவை குறித்து எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நாங்கள் பௌத்தர்கள், சிங்களவர்கள் என்று பெருமை பேசுகிறோம். ஆனால், உலகில் எங்கும் இப்படியான பகிடிவதை சித்திரவதை கூடங்கள் இல்லை.

அந்த சித்திரவதை கூடங்கள் இலங்கையில் மாத்திரமே இருக்கின்றன. நாம் கட்சி பேதமின்றி எமது பிள்ளைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.