பாலியல் தொந்தரவுகளை தடுக்க விசேட இலக்கத்தை வெளியிட்ட மகளிர் பாதுகாப்புப் பிரிவு

247 0

பாலியல் தொந்தரவுகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் 119 என்ற அவசர தொலைத் தொடர்பு இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நடவடிக்கைகளின் போது இன்னல்களை எதிர்நோக்கும் பெண்களுக்காகவே இந்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என சிறுவர் விவகார மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவின் தலைவர் எல்.ஆர்.அமரசேன தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தின் போது இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள், அமைதியாகவே உள்ளனர் இதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது என்றும் அமரசேன தெரிவித்துள்ளார்.

119 என்ற அவசர தொலைத் தொடர்பு இலக்கத்திற்கு எந்நேரமும் அழைப்பினை மேற்கொள்ளலாம் என்றும், சரியான தகவல்களை வழங்கி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவுச் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.