முறை சார்ந்த மீளாய்வு மூலம் அரச செலவினங்களை சீரமைக்க நடவடிக்கை

75 0

ரச செலவினங்களை சீரமைக்கும் நோக்கில் பூஜ்ஜிய நிலை அடிப்படையிலான வரவு – செலவுத் திட்ட முறையை அறிமுகப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதியால் 2023ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்ட யோசனையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

பூஜ்ஜிய நிலை அடிப்படையிலான வரவு – செலவுத் திட்ட முறையின் கீழ் முறை சார்ந்த மீளாய்வு மூலம் செலவிடும் வேலைத்திட்டங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறல், வீண்விரயம், குறைந்த முன்னுரிமைகளுடன் கூடிய செயற்பாடுகள் மற்றும் தற்போது நிலவுகின்ற நிதி ஒதுக்கீட்டுப் பயன்பாட்டுக்கான வினைத்திறனானதும் உற்பத்தித்திறன் மிக்கதுமான முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய, வருடாந்த வரவு – செலவுத் திட்ட மதிப்பீட்டின் மூலம் அதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் கீழ்க்காணும் 10 அமைச்சுக்கள் தொடர்பான முறை சார்ந்த மீளாய்வை மேற்கொள்வதற்காக பிரதி திறைசேரி செயலாளர் அல்லது திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரியின் தலைமையில் 10 அதிகாரிகள் குழுக்களை நியமிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, பெருந்தோட்டத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு என்பவற்றுக்காக குறித்த அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்படவுள்ளன.