குளவி கொட்டு – பெண்கள் உள்ளிட்டவர்கள் பாதிப்பு

303 0

ஹட்டன் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஹட்டன் லெதண்டி தோட்டத்தில் இன்று முற்பகல் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 5 பேர் குளவிகொட்டுக்கு இலக்காகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மரத்தின் அடிபகுதியில் இருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து கொட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவி கொட்டுக்கு இலக்கானவர்களில் 4 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் ஒருவர் ஆண் தொழிலாளர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.