ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படும் கேரள இளைஞர், தாக்குதலில் உயிரிழப்பு

226 0

இலங்கை ஊடாக ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்படும் கேரள இளைஞர், தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு கேரளாவில் இருந்து கர்ப்பிணிப் பெண்கள் அடங்கலாக 20 பேர் வரையில் இலங்கை ஊடாக ஆப்கானிஸ்தான் சென்று ஆங்கிருந்து சிரியாவை அடைந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்டதாக கூறப்பட்டிருந்தது.

அவர்களை அழைத்துச் சென்றதாக கூறப்படும் ஹபீஸ்தீன் தாகே கொலெத் என்பர், ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அவரது குடும்பத்தாருக்கு ஐ.எஸ். தீவிரவாதிகளால் இது தொடர்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.