நுவரெலியா பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள், இன்று போராட்டத்தில்…(காணொளி)

223 0

நுவரெலியா பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவை பிளான்டேசனுக்கு சொந்தமான 467 ஹெக்டேயார் காணியில் 4 ஏக்கர் காணியினை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்புச் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொகவந்தலாவை பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் இன்று பொகவந்தலாவை தொழிற்சாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டியிலுள்ள நபரொருவர் மாடு வளர்ப்புக்காக வளர்க்கப்படும் புற்தரையினை தனக்கு சொந்தமென ஆவணங்களை காட்டி அதில் சுயதொழில் ஆரம்பிக்க போவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் காணியினை துப்புரவு செய்ய முற்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தோட்ட நிர்வாகம் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளது. அதனைத் தொடர்ந்தே பொதுமக்களால் இவ் ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.

சுமார் 200 பேர் வரை கலந்து கொண்ட குறித்த ஆர்ப்பாட்டம் ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.