ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின், மாசி மாத திருவிழா(காணொளி)

317 0

மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை திருத்தலத்தின், மாசி மாத திருவிழா நேற்று நடைபெற்றது.

ஆலய மாசிமாத இறுதி திருவிழாவின் கூட்டுத் திருப்பலியை, திருகோணமலை மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ரீ.கிங்ஸ்லி றொபட் தலைமையில், பங்குதந்தை அருட்பணி ஐ.ஜினோ சுலக்சன், அருட்பணி செய்சா, அருட்பணி பயஸ் பிரசன்னா ஆகியோர் இணைந்து ஒப்புக் கொடுத்தனர்.

கடந்த 22ஆம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவில், நேற்று முன்தினம் மாலை நற்கருணை ஆராதனையும் திருச்சொரூப பவனியும் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்றுக் காலை விசேட கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து அடியார்கள் புடை சூழ கொடியிறக்கம் நடைபெற்றது.