பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் – சிறிசேன

247 0
எவ்வகையான விமர்சனங்கள் வந்தாலும், பௌத்த மதத்தினை பாதுகாக்க தமது அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அறநெறி பாடசாலைகள் மேலும் பலப்படுத்த வேண்டும்.
தொழிற்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் கிராம பகுதிகளில் பௌத்த சமயத்தின் வளர்ச்சி போதுமானதாக இல்லை.
 இதன் அடிப்படையில் பௌத்த மதத்தை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.