கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமென கோரி கடந்த 28 நாட்களாக வீதியில் இராணுவ முகாம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மக்களின் போராட்டக்களத்துக்கு 28ஆவது நாளான இன்றைய தினம் தென்னிந்திய திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய் மற்றும் இயக்குனரும் ஈழ உணர்வாளருமான புகழேந்தி தங்கராஜ் ஆகியோர் வருகைதந்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடல் குதிரைகள் திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்கு வருகை தந்த இவர்கள் இன்றையதினம் கேப்பாபுலவு போராட்டக்களத்தில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கான ஆதரவினை வெளியிட்டிருந்ததோடு மக்களுடன் அன்பாக காலந்துரையாடியதை அவதானிக்க முடிந்தது.