44 ஆவது பிரதம நீதியரசருக்கான பெயர் ஜனாதிபதியால் இன்று பரிந்துரை

217 0

இலங்கை உயர் நீதிமன்றத்துக்கான புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்படவுள்ளவரின் பெயர் இன்று (27) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அரசியலமைப்புச் சபைக்கு அனுப்பப்படவுள்ளது.

பிரதம நீதியரசராக பதவி வகிக்கும் கே. ஸ்ரீபவன் நாளை தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். இதனால், அப்பதவி இடைவெளியாக மாறவுள்ளது. இதற்கான பெயரையே ஜனாதிபதி இன்று தெரிவு செய்து அனுப்பவுள்ளார்.

ஜனாதிபதியால் புதிதாக தெரிவு செய்யப்படவுள்ளவர் இலங்கையின் 44 ஆவது பிரதமர் நீதியரசர் என்பது குறிப்பிடத்தக்கது.