உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளது – விஜயதாச

247 0

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு சட்டத் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.