கொழும்பில் 9 மணிநேர நீர் வெட்டு!

72 0

கொழும்பு மற்றும் கொழும்பின் புறநகர் பகுதிகளிலும் சனிக்கிழமை 09 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வள சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை-கல்கிசை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், கொட்டிகாவத்தை-முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பிரதேசங்களில் இதன் போது நீர் விநியோகம் தடைப்படும்.
அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர்த் தடை ஏற்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.