முச்சக்கர வண்டியொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் இரண்டரை வயதுக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் பொங்கல் தினமான 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ராகலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்துச் சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்து காயமடைந்த மேலும் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த முச்சக்கரவண்டியைச் செலுத்திய 16 வயதான சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையிலேயே பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

