நியூஸிலாந்து செல்ல முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தல்காரர்கள் ஆறு பேர்

235 0

சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்தபோது கைதுசெய்யப்பட்டவர்களுள், மனித கடத்தலுடன் தொடர்புடைய ஆறு பிரதான சந்தேகநபர்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது..

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நியூஸிலாந்து செல்ல முயற்சித்த 18 பேர் நீர்கொழும்பு கடற்பகுதியில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.