“ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வழியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒரணியில் திரள்க ” எனும் தொணிப் பொருளின்கீழ் திருகோணமலை நகரில் இன்று (10) செவ்வாய்கிழமை 6வது நாளாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது திருகோணமலை தபால் நிலைய சந்தி ஊடாக , மகேசர் விளையாட்டு மைதானம் வரை சுலோகங்களை ஏந்தி, கோசங்களை எழுப்பியவாறு நடைபவணியானது வருகைதந்து மகேசர் விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.


இதில் இளைஞர்கள், சமூக அமைப்பின் பிரதிநிதிகள், பெண்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர்.


இதனை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.


கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகிய இவ் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று செவ்வாய்கிழமை 10 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

