கொழும்பில் 18 மணி நேர நீர் வெட்டு!

119 0

கொழும்பில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை மாலை 4.00 மணி வரை 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாளிகாகந்த நீர்த்தேக்கத்துக்கு நீர் விநியோகிக்கும் குழாய் அமைப்பில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.