வவுனியாவில் தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்

62 0

வுனியா நகரப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று நேற்றிரவு (டிச. 31) திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

வவுனியா நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிளொன்று நீதிமன்றத்துக்கு முன்பாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து, உடனடியாக அதன் சாரதி கீழே குதித்துள்ளதுடன், வீதியால் சென்றவர்கள் மற்றும் அயலில் இருந்தவர்களின் உதவியோடு தண்ணீர் ஊற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

எனினும், மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து பகுதியளவில் சேதமடைந்துள்ளது.