பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்

251 0

கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால் பல மாணவர்கள் பல இன்னல்களுக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனை, கருத்திற் கொண்டு இந்தமுறை அதனை முற்றாக தடுக்கும் நோக்குடன் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் மாணவர்கள் முகம் கொடுக்கும் அனைத்து சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகளை இணையத்தின் ஊடாகவும் மற்றும் 24 மணித்தியாலங்களும் செயற்படக் கூடிய தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறையிட மாணவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்களின் தலைவர் மொஹான் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி 011 212 3456 என்ற இலக்கத்திற்கு அல்லது www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து எந்த நேரத்திலும் தமது பிரச்சினைகள் குறித்து கூற முடியும் என மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்