சட்டவிரோதமாக வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு 2 கோடி ரூபா மோசடி

81 0

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு தொலைபேசி நிறுவனம் ஒன்றுக்கு  இழப்பை ஏற்படுத்தும் வகையில் சுமார் 2 கோடி ரூபாவை மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நிறுவனத்தின் முகாமையாளர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நிறுவனம் ஒன்றின்  சிம்மை பாவித்து சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளைப் பெற்று 53,983 அமெரிக்க டொலர்களை மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் உண்மைகளை அறிக்கை செய்துள்ளது.