முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் (காணொளி)

170 0

கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் திகதி இடம்பெற்ற  மக்களின் மனங்களில் ஆறாத ரணமாய் படிந்த ஆழிப்பேரலை யின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது

அந்தவகையில் ஆழிப்பேரலை அனர்த்தம் காரணமாக காவு கொள்ளப்பட்ட  68  மாணவர்களின் நினைவேந்தல்  நிகழ்வு கள்ளப்பாடு அ.த.க.பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது

உயிரிழந்த மாணவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர்

நிகழ்வில் உயிரிழந் மாணவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்