பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபையால் விசேட சேவை

99 0

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் நன்மை கருதி, இலங்கைப் போக்குவரத்துச் சபை 200 மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து சேவை அமுலில் இருக்கும் என்பதோடு, கொழும்பு செல்வதற்கும் கொழும்பிலிருந்து திரும்புவதற்கும் ஏற்ற வகையில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.