மாணவன் ரஷீத் ஏன் உயிரிழந்தான்?

96 0

இவ்வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத்தர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர கல்விக்கான  விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்காக பாடசாலைக்குச் செல்லத் தயாரான பாடசாலை மாணவர் ஒருவர் அநுராதபுரம் புனித  நகரில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக  அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

நீராவி, தேவநம்பியதிஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த எம். ரஷிம் முகம்மத் ரஷீத் என்ற பாடசாலை மாணவரே உயிரிழந்துள்ளார்.

புதன்கிழமை (டிச. 21) அதிகாலை 4.45 மணியளவில் நெல் வியாபாரத்தில் ஈடுபடும் உறவினர் ஒருவரை  பஸ்ஸில் ஏற்றிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே  காட்டு யானை தாக்கி   உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.