2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களின் பதிவு இன்று (19) ஆரம்பமாகவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் ஊடாக அறிவிக்கப்படுவதாக அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும் மாணவர்கள் தங்கள் பல்கலைக்கழகம் மற்றும் கற்கை நெறிகள் தொடர்பில் பதிவு செய்யலாம்.
இந்தப் பதிவுகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதி வரை அனுமதி வழங்கப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

