வவுனியாவில் வெடிக்கும் நிலையில் கைக்குண்டு மீட்பு

190 0

வவுனியா மாமடு பகுதியில் வெடிக்கும் நிலையிலிருந்த கைக்குண்டு ஒன்று நேற்று(18.12.202) மீட்கப்பட்டுள்ளது.

மாமடு மலையார்பருத்திகுளம் பகுதியில் உள்ள தனியார் காணியினை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த கைக்குண்டு அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மாமடு பொலிஸில் காணி உரிமையாளரால் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸாரினால் குறித்த கைக்குண்டு அகற்றப்பட்டு அதனை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணை மாமடு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.