வவுனியா விசேட காணி மத்தியஸ்த சபையின் இரு அமர்வுகள் நடைபெறமாட்டாது என தவிசாளர் ஆர்.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.
வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபை அமர்வுகள் வவுனியா, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில் தரம் 5 மாணவர்களின் புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கிறிஸ்மஸ் விடுமமுறை காரணமாக எதிர்வரும் 18ஆம் திகதி மற்றும் 25ஆம் திகதியில் இடம்பெறவிருந்த காணி விசேட மத்தியஸ்த சபையின் அமர்வுகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரான அமர்வு 01.01.2023 ஆம் திகதி வழமை போன்று இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

