யாழில் நாய்களை விழுங்கிய முதலை மடக்கிப் பிடிப்பு!

161 0

இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய 8 அடி நீளமான முதலையை யாழ்ப்பாணம் சாவகச்சேரி மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி சிவன் கோவிலடியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றினுள் புதன்கிழமை (டிச.14) இரவு உட்புகுந்த சுமார் 8 அடி நீளமான முதலை, அங்கிருந்த இரண்டு நாய்களை விழுங்கி விட்டு அசையமுடியாத நிலையில் அங்கேயே உறங்கியுள்ளது.

காலையில் நாய்களை காணவில்லை என விடுதி பணியாளர்கள் தேடிய போது, விடுதி வளாகத்தில் முதலை ஒன்று உறக்கத்தில் இருப்பதனை கண்ணுற்றுள்ளனர்.

பின்னர் அயலவர்களின் உதவியுடன் முதலையை உயிருடன் பிடித்து மரமொன்றில் கட்டி வைத்த்ததுடன், அது தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் முதலையை  மீட்டு சென்றுள்ளனர்.