அம்பலப்பெருமாள்குளம் வான் பாய்கின்றது

75 0

முல்லைத்தீவு அம்பலப்பெருமாள்குளம் நேற்று (13) காலை முதல் வான் பாயத் தொடங்கி உள்ளது.

ஏற்கனவே கோட்டைக்கட்டியகுளம், மருதங்குளம், பழையமுறிகண்டிக்குளம், தேராங்கண்டல்குளம் வான்பாயும் நிலையில், வவுனிக்குளம் நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவில் ஐந்தாவது குளமாக இக்குளம் வான் பாய்கின்றது.

பழையமுறிகண்டிக்குளம் வான் பாய்ந்து அம்பலப்பெருமாள்குளத்தினை நிரப்புவதன் மூலம் இக்குளம் வான் பாய்கின்றது.