அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகள் மாநகர சபைகளாக தரம் உயர்கின்றன !

140 0

அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போதுள்ள உட்கட்டமைப்பு மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி கூடுதல் நிதியை செலவிடாமல் நகர்ப்புற வளர்ச்சிக்கான தேவைகளை விரைவாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.