சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு- யேர்மனி.

277 0

சர்வதேச மனிதவுரிமை நாளை முன்னிட்டு ஈழத்தமிழர்களுக்கு நடைபெற்ற/நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக சர்வதேச நீதி கோரும் கவனயீர்ப்பு நிகழ்வு யேர்மன் தலைநகரில் பாராளுமன்றத்தின் முன்பாக பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது.

கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாது தாயக உறவுகளுக்காக நீதி கோரி பல்லின மக்களிடம் தமது கவனத்தை கொண்டுசென்றதோடு, ஈழத்தமிழர்களின் இன்றைய நிலையை சிறிய உரை ஊடாகவும் வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.