அடை மழையால் திருகோணமலையில் விவசாயச் செய்கை நீரில் மூழ்கியது

231 0

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக பலத்த அடை மழை காரணமாக நெற் செய்கை நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நெற் பயிருக்காக விளைச்சல் மேற்கொண்டு ஒரு மாதம் கடந்த நிலையில் மழை வெள்ளத்தில் தற்போது நெற்செய்கை நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

குறித்த விவசாய நிலமானது சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்செய்கை இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு போதுமான விளைச்சல் கிடைக்காத சந்தர்ப்பத்தில் பெரும் நஷ்டங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.

எனவே தங்களுக்கு இதற்கான நஷ்ட ஈட்டினையும் போதிய யூரியா உரத்தினையும் மானிய அடிப்படியில் வழங்குமாறும் சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.