மன்னாரில் மோப்ப நாய்களுடன் போதைப்பொருள் வேட்டையில் பொலிஸார்

201 0

ன்னார் மாவட்டத்தில் வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் போதைப்பொருள் தேடும் சோதனை நடவடிக்கையை மன்னார் பொலிஸார் நேற்று (டிச. 8) வியாழக்கிழமை முன்னெடுத்தனர்.

வட மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயதிலக தலைமையில் நேற்று அதிகாலை தொடக்கம் வீதிகள், பாடசாலைகள், பொது இடங்களில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக, பாடசாலை சூழலில் போதைப்பொருள் பாவனை அறிகுறிகள் காணப்படுகிறதா என்பது தொடர்பிலும் மோப்ப நாய்களின் உதவியுடன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அனைத்து பாடசாலைகள் மற்றும் அரச அலுவலகங்களிலும் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.