கொழும்பு, மாளிகாவத்தையில் ஒருவர் இரும்புக் குழாயால் தாக்கப்பட்டுக் கொலை!

177 0

கொழும்பு, மாளிகாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்த வீரசேகர மாவத்தை பகுதியில் ஒருவர் இரும்புக் குழாயால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மாளிகாவத்தை மஸ்ஜித் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

வாய்த்தர்க்கம் காரணமாக இடம்பெற்ற தாக்குதலின் விளைவாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், தகராறுக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.